கடத்தப்பட்ட சென்னை தொழிலதிபர் மகன் ஹசன் திருவள்ளுர் அருகே மீட்பு
சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் ஹசன் திருவள்ளூர் அருகே மீட்கப்பட்டுள்ளார்.
பாரிமுனையை சேர்ந்த தொழிலதிபர் காஜாவின் மகன் ஹசன் நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
ஹசனை விடுவிக்க ஒன்றரை கோடி ரூபாயை 12 மணிக்குள் கொடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடத்தல்காரர்கள் மிரட்டியிருந்தனர்.
கடத்தல்காரர்களை பிடிக்க நேற்றிரவு முதல் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் கடத்தல்காரர்கள் ஹசனை இறக்கி விட்டு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கெடு முடிந்த நிலையில் ஹசனை தாங்களாகவே விடுவித்துள்ளனர் கடத்தல்காரர்கள். இதனிடையே ஹசனை கடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
oneindia.com